Published : 03 Mar 2015 09:19 AM
Last Updated : 03 Mar 2015 09:19 AM
அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாதவர்களுக்கு நாளை (புதன்கிழமை) மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் - செயலர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற ஆணையின்படி, மாநில வேலைவாய்ப்பக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் 652 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு மார்ச் 2-ம் தேதி கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பையும் பயன்படுத்தா தவர்களுக்கு 4-ம் தேதி (நாளை) இறுதியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
ஏற்கெனவே சரிபார்ப்புக்கு வராதவர்கள், அதற்கான ஆதாரங் களுடன் குறிப்பிட்ட சான்றிதழ் சரி பார்ப்பு மையங்களில் நாளை கலந்துகொள்ளலாம். இனி மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT