Published : 05 Mar 2015 07:39 PM
Last Updated : 05 Mar 2015 07:39 PM

இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுவிப்பு

இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அகஸ்டின், மாரிச்செல்வம், செல்வம், பாண்டி, மாணிக்கம், பூரணம், முனியசாமி ஆகிய 7 மீனவர்களும் கோடியக்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். இந்த 7 பேரும் பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், திணைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

மீன்பிடித்த பின்னர் அதிகாலை கரை திரும்பும் போது, அவர்களை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்தனர்.சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க 2 லட்சம் ரூபாய் கேட்டு படகு உரிமையாளர்களுக்கு நிபந்தனை விதித்தனர்.

இந்நிலையில், சுமார், 2 மணி அளவில், தமிழக மீனவர்களின் மீன்களையும், வலைகளையும் பறித்துக்கொண்டு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மீன்களை இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x