Published : 28 Mar 2015 04:10 PM
Last Updated : 28 Mar 2015 04:10 PM
இரு மாநில மக்களின் ஒற்றுமைக்காகவே முழு அடைப்பில் பங்கேற்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
''கர்நாடகா அணை கட்ட முயல்வது பற்றி பிரதமர் மோடி கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி தரவில்லை. நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.
இரு மாநில மக்களின் ஒற்றுமைக்காகவே முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. இரு மாநில கட்சித் தலைவர்கள் காவிரி பிரச்னையை அரசியலாக்க முயற்சிக்கிறார்கள்'' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT