Published : 02 Mar 2015 10:57 AM
Last Updated : 02 Mar 2015 10:57 AM

மருத்துவ மேற்படிப்பு நுழைவுத் தேர்வு: 9 ஆயிரம் பேர் எழுதினர்

சென்னையில் நேற்று நடைபெற்ற மருத்துவ முதுநிலை பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப் புக்கான நுழைவுத் தேர்வை 9ஆயிரத்து 486 பேர் எழுதினர்.

தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,194 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் போக மீதமுள்ள இடங்கள் மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்படும். இதில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பொது மருத்துவத் துக்கு 577 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்காக 8,713 பேர் விண்ணப்பித்து 8,379 பேர் எழுதி னர். சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டப் படிப்புக்கு 20 இடங்கள் உள்ளன.

இதற்கு 1,156 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1107 பேர் தேர்வை எழுதினர். இந்த தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x