Published : 12 Mar 2015 09:12 AM
Last Updated : 12 Mar 2015 09:12 AM
தினமும் தான் சாப்பிட்ட பாத் திரத்தை பள்ளிக் குழந்தைகளை கழுவ வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே கதிர் நாயக்கன்பட்டியில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 79 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளி ஆசிரியர் சேதுபதிமுருகன் என்பவர், பள்ளிக் குழந்தைகளை அவர் சாப்பிட்ட எச்சில் பாத் திரங்களை கழுவ வைப்பதாகவும், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காமல் அடிக்கடி கைபேசியில் பேசிக் கொண்டே இருப்பதாகவும், குழந்தைகளை ஒருமையில் இழிவாகத் திட்டுவதாகவும் கூறி, பொதுமக்கள் நேற்று அவரைக் கண்டித்து பள்ளிக்கு குழந்தை களை அனுப்பாமல் பள்ளியின் வாயிற்கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த பட்டிவீரன்பட்டி போலீஸார், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாண்டியராஜன் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். பின்னர் இதுபற்றி குழந்தை களிடம் விசாரித்த தொடக்கக் கல்வி அலுவலர் பாண்டியராஜன், ஆசிரியர் சேதுபதிமுருகனை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT