Published : 27 Mar 2015 09:51 AM
Last Updated : 27 Mar 2015 09:51 AM

விமான நிலையத்தில் நைஜீரிய இளைஞர் கைது

விசா காலம் முடிந்த பிறகும் இந்தியாவில் தங்கியிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் இருந்து நைஜீரியாவுக்கு விமானத்தில் செல்வதற்காக அந்நாட்டைச் சேர்ந்த சிமா ஈகே (30) என்பவர் நேற்று முன்தினம் விமான நிலையம் வந்தார். அவரிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலி எனவும், விசா காலம் முடிந்த பிறகும் அவர் இந்தியாவில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x