Published : 26 Mar 2015 09:27 AM
Last Updated : 26 Mar 2015 09:27 AM

ரூ.1 கோடி போதைப் பொருட்கள் சிக்கின: 2 பேர் கைது

ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புழல் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப் படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் புழல் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சாலைகளில் சந்தேகப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையும் செய்தனர்.

சென்னை புழல் பகுதியில் போதைப் பொருட்கள் கடத்தப் படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான போலீஸார் புழல் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். சாலைகளில் சந்தேகப்பட்ட வாகனங்களை நிறுத்தி சோதனையும் செய்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் 3 பார்சல்களில் வெள்ளை நிறத்தில் இருந்த பொடியை சோதனை செய்தபோது, அவை 3 விதமான போதைப் பொருட்கள் என தெரியவந்தது. ஒவ்வொரு பார்சலும் தலா ஒரு கிலோ எடையில் இருந்தன. உடனே போலீஸார் அவரை கைது செய்து புழல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பிடிபட்டவர் அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த சாமிநாதன்(24) என்பது தெரிந்தது. பொறியியல் படிப்பை முடித்துள்ள சாமிநாதன், கூடா நண்பர்களுடன் சேர்ந்து இந்த செயலை செய்துள்ளார். அந்தமானை சேர்ந்த தக்காளி ராஜா என்ற காணிக்கை ராஜா என்பவரிடம் இருந்து போதைப் பொருட்களை சாமிநாதன் வாங்கியிருக்கிறார்.

போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக சென்னை வேப்பம்பட்டில் வாடகை வீட்டில் தங்கியிருந்த காணிக்கை ராஜாவை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ஒரு கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட 4 கிலோ போதை பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி. கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x