Published : 07 Mar 2015 10:03 AM
Last Updated : 07 Mar 2015 10:03 AM

மத்திய அரசுக்கு பாரிவேந்தர் கோரிக்கை

ஐடிஐ மாணவர்களுக்கான தேர்வுகளில் நடைமுறையில் இருக்கும் ‘எதிர்மறை மதிப்பெண்’ முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐடிஐ மாணவர்களுக்கு 2013-ம் ஆண்டுமுதல் பருவத் தேர்வு முறையைக் கொண்டு வந்ததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது. காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவந்த எதிர்மறை மதிப்பெண் முறையால், குறைவான மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெறும் நிலையிலிருக்கும் ஒரு மாணவனின் மதிப் பெண்ணிலிருந்து எதிர்மறை மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனால் தேர்ச்சி விகிதம் பெரிதும் குறைகிறது. ஆகவே, இந்த எதிர்மறை மதிப்பெண் முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x