Published : 30 Mar 2015 10:17 AM
Last Updated : 30 Mar 2015 10:17 AM

வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழா: 327 மாணவர்களுக்கு பட்டம்

வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் எச்.தேவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 327 மாணவ, மாணவிகளுக்கு பொறியியல் பட்டங்களையும், எம்.பி.ஏ. பட்டங்களையும் வழங்கினார். மேலும் அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 21 மாணவர்களுக்கு பட்டங்களையும் தங்கக் காசுகளையும் ரொக்க பரிசுகளையும் அவர் வழங்கினார். அவர் வாழ்த்துரை வழங்கும்போது, “முதல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுமே சிறந்த சாதனையாளர்களாக வளர முடியும். எந்த வேலையையும் மனம் தளராமல் செய்து முடிக்க வேண்டும்” என்றார்.

கவுரவ விருந்தினராக பங்கேற்ற காக்னிசென்ட் நிறுவன முதன்மை இயக்குநர் மதிவாணன் இளங்கோவன் பேசும்போது, “மாணவர்கள் பணிபுரிந்து கொண்டே தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப உலகத்தோடு ஒன்றிணைந்து செயல்புரிய தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றும்போது, “மாணவர்கள் தலைசிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும்” என்றார். கல்லூரி முதல்வர் டி.சந்திரசேகர் கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.

இவ்விழாவில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன், தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன், இயக்குநர் எம்.வி.எம்.சசிகுமார், கல்லூரியின் துணை முதல்வர் எஸ்.சௌந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x