Published : 10 Apr 2014 12:33 PM
Last Updated : 10 Apr 2014 12:33 PM

நலிவடைந்தோருக்கு கருணாநிதி ரூ.3 லட்சம் உதவி

மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 13 பேருக்கு ரூ.3.25 லட்சத்தை திமுக தலைவர் கருணாநிதி வழங்கியுள்ளார்.

இதுபற்றி திமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 5 கோடி ரூபாயை வங்கியில் வைப்புநிதியாக போட்டு, அதில் கிடைக்கும் வட்டியை மாதந்தோறும் நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் கருணாநிதி வழங்கி வருகிறார். அதன்படி, மார்ச் மாதம் வட்டியாகக் கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 13 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் (மொத்தம் ரூ.5.25 லட்சம்) வழங்க புதன்கிழமை அனுமதித்துள்ளார். பயனாளிகளுக்கு தபால் மூலம் வரைவுக்காசோலைகளாக இந்த நிதி அனுப்பி வைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x