Published : 02 Mar 2015 11:16 AM
Last Updated : 02 Mar 2015 11:16 AM

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்: பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா உறுதி

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 86 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இலங்கைக்கு பிரதமர் மோடி செல்லும்போது, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா கூறினார்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கை அதிபராக சிறிசேனா பொறுப்பேற்ற பிறகு, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 86 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இந்தியப் பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்.

மத்திய அரசின் பட்ஜெட் மூலம் விலைவாசி கட்டுக்குள் கொண்டுவரப்படும். பொருளாதாரம் வளர்ச்சி அடையும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே காரணம். டெல்லி தேர்தல் முடிவால் பாஜகவுக்கு பின்னடைவு இல்லை. காங்கிரஸ் கட்சியின் வாக்குகள்தான் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்துள்ளன. எனினும், பாஜக தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x