Published : 12 Apr 2014 11:58 AM
Last Updated : 12 Apr 2014 11:58 AM

கேபிள் பழுதால் பிராட்பேண்ட் சேவை பாதிப்பு

பிஎஸ்என்எல் கேபிளில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் பிராட்பேண்ட் சேவை பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத் தூர் பிஎஸ்என்எல் தொலைபேசி தொடர்பகத்தில் இருந்து ஆப்டிக் கேபிள் மூலம் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளுக்கு பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக் கிழமை காலை திடீரென பிராட் பேண்ட் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டன. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, பொறியாளர்கள் இதுகுறித்து ஆய்வு செய்தனர். அப்போது, பட்டாபிராம் பகுதியில் கேபிள் துண்டிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதி யில் சென்னை-திருப்பதி நெடுஞ் சாலை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, சாலையின் ஓரத்தில் பள்ளம் தோண்டும் போது, கேபிள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து, ஊழியர்கள் கேபிள் பழுதை சரி செய்தனர்.

இதன் காரணமாக, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் ஐந்து மணி நேரம் பிராட்பேண்ட் சேவை பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x