Published : 30 Mar 2015 05:54 PM
Last Updated : 30 Mar 2015 05:54 PM

கர்நாடக காங்கிரஸை எதிர்க்கத் தயங்க மாட்டோம்: இளங்கோவன்

மேகேதாட்டு அணை குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் கருத்து தவறானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னை சத்திய மூர்த்தி பவனில் காவிரியின் குறுக்கே அணைகட்டும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தலைவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு தலைமையேற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' மேகேதாட்டு அணையால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்து தவறானது.

மேகேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் நீர் ஆதாரம் பாதிக்கப்படும். அதையும் மீறி, அணை கட்டினால் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசை தமிழக காங்கிரஸ் எதிர்க்கும்.

ஜெயலலிதா வழிகாட்டுதல்படி பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார். குற்றவாளியின் வழிகாட்டுதலின் படி பட்ஜெட் தயாரிக்கலாமா?'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x