Published : 28 Mar 2015 09:42 AM
Last Updated : 28 Mar 2015 09:42 AM
எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்தது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.மோகன்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நுங்கம்பாக்கத் தைச் சேர்ந்த டாக்டர் எம்.ஏ.நிசார் அகம்மது சென்னை உயர் நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந் தார். அதில் போக்குவரத்துத் துறை செயலாளராக பதவி வகித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.மோகன்ராஜ் மற்றும் சென்னை பாடியைச் சேர்ந்த எஸ்.செல்வகுமார் ஆகியோரை எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக தெரியும். எனது மகளுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்து வக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாக அவர்கள் இருவரும் என்னிடம் கூறினர். அதற்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக தர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நான் அவர்களுக்கு ரூ.50 லட்சம் அளித்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி சீட் வாங்கித் தரவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன், இப்புகாரின் தன்மை கருதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT