Published : 19 Mar 2015 10:42 AM
Last Updated : 19 Mar 2015 10:42 AM

கருத்துரிமைக்கு எதிரான தாக்குதல்: கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதிய தலைமுறை தொலைக் காட்சி ஊழியர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்தும் தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிராக தொடர்ந்து நடை பெற்றுவரும் வன்முறைகளைக் கண்டித்தும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, பத்திரிகையாளர்கள் ஞாநி, ஆர்.எஸ்.மணி, எழுத்தாளர் அருணன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x