Published : 28 Mar 2015 09:32 AM
Last Updated : 28 Mar 2015 09:32 AM

கொள்முதல் விலையை அதிகரித்ததால் பால் உற்பத்தி 30 லட்சம் லிட்டராக உயர்வு

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று நடந்தது. அதன் விவரம்:

டாஸ்மாக் அட்சய பாத்திரமா?

கே.பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்):

பற்றாக்குறை பட்ஜெட் ஒரு பெரிய பிரச்சினை யே இல்லை என்று கூறியுள்ள நிதித்துறை செயலாளர், டாஸ்மாக் மூலம் சுமார் ரூ.29 ஆயிரம் கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார். டாஸ்மாக் வருமானம் அளிக்கும் அட்சய பாத்திரமா? டாஸ்மாக் கடைகள் இருப்பதால் எத்தனையோ பெண் கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.

மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வை துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்: தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மதுபானங் களின் விலை உயர்வு காரணமா கவே அரசின் வருமானம் அதிகரிக் கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாலபாரதி:

பால் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நத்தம் விஸ்வநாதன்:

பால் கொள்முதல் விலை அதிகரிக் கப்பட்டதால் பால் விற்பனை விலையை உயர்த்தவேண்டி இருந்தது. பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். தனியார் நிறுவனங்களைவிட ஆவின் பால் விலை குறைவுதான்.

இவ்வாறு விவாதம் நடந்தது. பால் விலை உயர்வு தொடர்பான புகாருக்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘பால் கொள்முதல் விலையை உயர்த்தியதில் எந்த தவறும் இல்லை. பெரும்பாலும் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள்தான் ஆவின் பால் பயன்படுத்துகின்றனர். பால் விலை உயர்வால் ஏழைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. கொள்முதல் விலையை உயர்த்தியதால், தமிழகத்தின் தினசரி பால் உற்பத்தி 23 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x