Published : 17 Mar 2015 09:06 AM
Last Updated : 17 Mar 2015 09:06 AM

இயக்குநர் கே.பாலசந்தர் பெயரில் புதிய அறக்கட்டளை தொடக்கம்

திரைப்பட இயக்குநர் கே.பால சந்தர் பெயரில் புதிய அறக்கட் டளையை தொடங்கியுள்ளதாக அவரது மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி தெரிவித் துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: எனது தந்தை பெயரில் ‘கே.பால சந்தர் பவுண்டேஷன்’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளோம். இந்த அறக்கட்டளையில் கே.பால சந்தரின் குடும்ப உறுப்பினர்களான ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, பிரசன்னா, கீதா கைலாசம், கந்தசாமி பரதன் மற்றும் இயக்குநர் வசந்த் சாய் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பின் மூலம், திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தை களுக்கு கல்வி உதவி வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்குவோம். விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு ‘கிரியேடிவ் எக்ஸலண்ஸ்’ விருது, நாடகம், திரைப்படம், சின்னத்திரை ஆகிய 3 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது, தொலைகாட்சித் துறை யைச் சேர்ந்த ஒருவருக்கு கே.பாலசந்தரின் மகன் மறைந்த கைலாசம் பெயரில் படைப்பாளி விருது அளிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x