Published : 31 Mar 2015 09:21 AM
Last Updated : 31 Mar 2015 09:21 AM

பல்கலை. கட்டிடத்தின் தரம், உறுதியை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்: திருவாரூரில் துணைவேந்தர் அறிவிப்பு

திருவாருர் மத்திய பல்கலைக் கழகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் தரம் மற்றும் உறுதித்தன்மையை ஆராய குழு அமைக்கப்படும் என்றார் அப்பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) த.செங்கதிர்.

பல்கலைக்கழகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்படும் விருந்தினர் மாளிகையின் முகப்பு கட்டுமானம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்த விபத்து துரதிஷ்டமானது. உயிரிழந் தவர்கள் மற்றும் காயமடைந் தவர்களுக்கு இழப்பீடு வழங்கு வதற்கு மத்திய மனிதவள மேம் பாட்டுத் துறை அமைச்சகம் அனுமதியளித்தால் பல்கலைக் கழக நிர்வாகம் அதை செயல் படுத்தும்.

இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கட்டுமானப் பணிகளும், மத்திய பொதுப்பணித் துறை (சி.பி.டபிள்யு.டி) மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய மாநில காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. நாங்கள், தொடர்புடைய துறைகளுக்கு இதுகுறித்த தகவல் களை அனுப்பியுள்ளோம்.

இந்த விபத்து குறித்து, மத்திய பொதுப்பணித் துறை யிடம் விரிவான அறிக்கை கேட்டுள் ளோம். விபத்து குறித்து மக்களிடம் ஏற் பட்டுள்ள அச்சத்தைப் போக்க பல்கலைக்கழக நிர்வாகம், இங்கு கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டிடங்களின் தரம், உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய திருச்சி என்ஐடி மற்றும் சென்னை ஐஐடி நிறுவனங்களின் உதவியைக் கோர உள்ளது என்றார்.

பதிவாளர் (பொறுப்பு) பொன்.ரவீந்திரன் அளித்த பேட்டி: இந்தப் பல்கலைக்கழகத்துக்காக மாநில அரசால் ஒதுக்கப்பட்ட 516 ஏக்கரில், 416 ஏக்கர் நிலத்தில் கல்விசார் கட்டிடங்கள், 100 குடியிருப்புகள், கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.

பெற்றோர் அச்சம்

இந்திய- நார்வே நாடுகளின் ஒப்பந்தபடி மாணவர், ஆசிரியர் பரிமாற்றத்துக்காக ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கு வரும் வருகைதரும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் தங்குவதற்கு நகரில் போதிய விடுதிகள் இல்லாததால், 104 அறைகளுடன் கூடிய, 4 மாடி விருந்தினர் இல்ல கட்டிடம் ரூ.20 கோடி செலவில் 3 மாதங்களுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு விட்டது. தற்போது இந்தக் கட்டிடத்தின் நுழைவு வாயில் முகப்பில் உயர்மட்ட போர்டிகோ அமைக்கும் பணியின்போதுதான் விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தால், இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் அனைத்தும் பாதுகாப்பற்றவை என்பது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது. இதனால், பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டு மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது, பின்தங்கிய இப்பகுதியின் மாணவ, மாணவிகளுக்கு பெரும் இழப்பாகிவிடும்.

ஆய்வுக்குழு

ரூ.1,000 கோடி நிதியில் முழுமையடைய உள்ள இந்தப் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் உயர் ஆய்வு மேற்கொள்ளத் தேவையான நவீன ஆய்வுக் கருவிகளுக்காக இந்தாண்டு முதல்கட்டமாக ரூ.90 கோடி தருமாறு கோரினோம். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், வெளியே சென்று ஆய்வு செய்யும் நிலை உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு(யுஜிசி) கடிதம் எழுதியுள்ளோம். அவர்கள் குழுவை அனுப்பி தேவைகள் குறித்து ஆய்வு செய்வதாகத் தெரிவித்துள்ளனர். தேசிய தர மதிப்பீட்டுக் குழுவுக்கும் (நாக்) விண்ணப்பம் அனுப்பியுள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x