

இலங்கை அரசின் தடுப்புக் காவலில் உள்ள 29 தமிழக மீனவர்களையும், அவர்களின் 3 படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களும், அவர்களுக்குச் சொந்தமான 3 மீன்பிடி படகுகளும் கடந்த 26-ம் தேதி இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, தற்போது மீனவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும்கூட இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது துரதிர்ஷ்டமாகும்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு நலனுக்காக ஜெயலலிதா மேற் கொண்ட இடையறாத முயற்சி களுக்கு பலன் கிடைத்துவரும் சூழலில், இலங்கை கடற்படை யினரின் இந்த நடவடிக்கை, கச்சத்தீவு புனித அந்தோணி யார் ஆலய திருவிழா கொண் டாட்டத்தை பாழ்படுத்திவிட்டது.
இலங்கை அரசின் தடுப்புக்காவலில் நீண்டகாலமாக வைக்கப்பட்டிருந்த 81 மீன்பிடி படகுகள் எப்போது திரும்ப வரும் என்று தமிழக மீனவர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே, இலங்கை அரசின் தடுப்புக் காவலில் உள்ள 29 தமிழக மீனவர் களையும், அவர்களின் 3 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சகத்துக்கு தாங்கள் உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.