Published : 04 Mar 2015 10:09 AM
Last Updated : 04 Mar 2015 10:09 AM
தொழிற்சாலைகளில் தொய்வில் லாத தொடர் உற்பத்திக்கான பாது காப்பு கலாச்சாரம் குறித்த கருத் தரங்கம் இன்று நடைபெறுகிறது.
தேசிய பாதுகாப்பு குழுமம் சென்னை மண்டல துணைக்குழு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகியவை இணைந்து “தொழிற்சாலைகளில் தொய்வில்லாத தொடர் உற்பத்திக்கான பாதுகாப்பு கலாச்சாரம்” என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்துகின்றன. சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலையில் உள்ள ராஜ் பார்க் ஹோட்டலில் காலை 9.30 மணிக்கு இக்கருத்தரங்கம் தொடங்குகிறது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு செயலாளர் மா.வீரசண்முகமணி பாதுகாப்பு கையேட்டை வெளியிடுகிறார். ஊரகத் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் தேசிய பாதுகாப்பு குழுமத்தின் வலைத்தளம் மற்றும் பாதுகாப்பு விளம்பரத்தட்டை வெளியிட்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT