Published : 06 Mar 2015 09:29 AM
Last Updated : 06 Mar 2015 09:29 AM

இலங்கை மீனவர்கள் சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்கள் விடுவிப்பு

கோடியக்கரை அருகே தாங்கள் சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர் கள் 7 பேரையும் இலங்கை மீனவர் கள் நேற்று மாலை விடுவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த கு.அகஸ்டீன் (42), முனுசாமி (39), க.பூரணம் (55), உ.செல்வம் (46), மு.மாணிக்கம் (26), மு.பாண்டி (37), மு.செல்வம் (37) ஆகிய 7 பேரும் கோடியக்கரை யில் தங்கி மீன்பிடித்து வந்தனர்.

பாம்பனைச் சேர்ந்த தே.மைக் கேல் (33) என்பவருக்கு சொந்தமான படகில் கோடியக்கரையில் இருந்து மார்ச் 2-ல் கடலுக்குச் சென்ற மீன வர்கள் 7 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் (மார்ச் 3) மீன்பிடித்துக் கொண்டிருந் தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேரையும் சிறைபிடித்தனர்.

தங்களது வலைகளை சேதப் படுத்தி விட்டதாகவும் அதற்குரியத் தொகையை கொடுக்காவிட்டால், இலங்கை கடற்படையிடம் ஒப் படைக்கப்போவதாகவும் தமிழக மீனவர்களை அவர்கள் மிரட்டின ராம். இது குறித்து மீனவர் அகஸ் டீன் படகு உரிமையாளர் மைக் கேலை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதைய டுத்து மைக்கேல் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து பாம்பன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே சிறைபிடிக்கப் பட்ட 7 மீனவர்களையும் இலங்கை மீனவர்கள் விடுவித்துவிட்டதாக நேற்று மாலை மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இலங்கை மீனவர்களால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பாம்பன் மீனவர்கள் நேற்று கோடியக்கரைக்கு வந்து சேர்ந்தனர்.

பாம்பனில் இருந்து மார்ச் 2-ல் கடலுக்குச் சென்ற இவர்கள் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த இலங்கை மீனவர்கள் பாம்பன் மீனவர்களைச் சுற்றி வளைத்து அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறித் துக்கொண்டு அங்கிருந்து அவர்களை விரட்டியடித்துள்ளனர். பிடித்த மீன்களை இழந்து பாண்டி, சேகர், முனீஸ், முருகானந்தம், டோமினிக் ஆகிய 5 மீனவர்களும் நேற்று மதியம் கோடியக்கரை படகுத்துறைக்கு வந்துசேர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x