Published : 23 Mar 2015 10:03 AM
Last Updated : 23 Mar 2015 10:03 AM

மணல் லாரி உரிமையாளர்கள் போராட்ட அறிவிப்பு

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

லாரிகளில் நிர்ணயிக்கப்பட்டதை காட்டிலும் அதிகமாக எடை எற்றிச் செல்வதால் சாலை விபத்துகள் நடக்கின்றன. கூடுதல் சுமைகளை ஏற்றுவதை தடுக்க கோரி கடந்த வாரம் முதல்வரிடம் மனு அளித்துள்ளோம். இது தொடர்பாக பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் உறுதியளித்தார். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 6 சக்கர வாகனங்கள் 10 டன் எடையைத்தான் ஏற்ற வேண்டும். ஆனால் சிலர் 16 டன் வரை ஏற்றுகிறார்கள். 10 சக்கர லாரிகள் 16 டன் எடையைத்தான் ஏற்றிச் செல்ல வேண்டும். ஆனால், 23 டன் வரை ஏற்றுகின்றனர். கூடுதலாக மணல் ஏற்றினால், வரும் 1-ம் தேதி முதல் லாரிகளை இயக்கமாட்டோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x