Published : 13 Mar 2015 10:10 AM
Last Updated : 13 Mar 2015 10:10 AM
செங்கல்பட்டு-விழுப்புரம் மார்க்கத்தில் கருங்குழி- மதுராந்தகம் இடையே அமைக்கப்பட்டுள்ள இருவழி ரயில் பாதையில், பாதுகாப்பு ஆய்வுப் பணி மற்றும் பொறியியல் பணிகள் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, சென்னை கடற்கரை- மேல்மருவத் தூர்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் களில் (66043/66044) செங்கல்பட்டு- மேல்மரு வத்தூர் இடையேயான சேவை மட்டும் ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில், மேல்மருவத்தூர்- விழுப்புரம்- மேல்மருவத்தூர் பயணிகள் ரயில்கள் (66045/66046) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
ரயில் நேரத்தில் மாற்றம்:
மதுரை- சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636), மதுரையில் காலை 7 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக காலை 9 மணிக்குப் புறப்படும். அதேபோல, சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605), சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்படுவதற்குப் பதிலாக மாலை 5.25 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
மேலும், சென்னை எழும்பூர்-மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஒட்டிவாக்கம் ரயில் நிலை யத்தில் 35 நிமிடங்கள் நிறுத்திவைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT