Published : 16 Mar 2015 10:25 AM
Last Updated : 16 Mar 2015 10:25 AM

கோயில் தேர் முறிந்து விழுந்து ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூரில் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசிமாதம் தூக்குத்தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான தூக்குத்தேர் விழா கடந்த 11-ம் தேதி தொடங்கியது.

32 அடி உயரம் கொண்ட தூக்குத்தேர் நேற்று ஒருவந்தூர் பகுதியில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்போது தேரின் மேல்பகுதி முறிந்து விழுந்தது. அதில் கணபதிபாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (42) உள்பட 4 பேர் தேரின் அடியில் சிக்கிக் கொண்டனர். இதில் ரவிச்சந்திரன் வழியிலேயே உயிரிழந்தார். காயமடைந்த 3 பேர் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x