Published : 11 Mar 2015 09:18 AM
Last Updated : 11 Mar 2015 09:18 AM

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான 5 மாத குழந்தையை கண்டுபிடிக்க தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. குழந்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ரயில்வே போலீஸார் கூறியதாவது:

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 5 மாத பெண் குழந்தை நேற்று முன்தினம் காணாமல் போனது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். ரயில் நிலையத்தின் 4 மற்றும் 5-வது நடைமேடைகள் அருகேவுள்ள சிசிடிவி கேமராவில் சுடிதார் அணிந்திருந்த பெண் ஒருவர், கைக் குழந்தையை கொண்டு சென்றது படம்பிடிக்கப் பட்டுள்ளது. அதையும், மற்ற தகவல்களையும் வைத்துக் கொண்டு குழந்தையைத் தேடி வருகிறோம். இதற்காக டிஎஸ்பி தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலரிடம் விசாரணை யும் நடத்தப்பட்டு வருகிறது. காணாமல் போன குழந்தையை விரைவில் கண்டுபிடிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x