Published : 13 Mar 2015 08:26 AM
Last Updated : 13 Mar 2015 08:26 AM

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் சுமுகம்: 240 நாட்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம்; நிலுவைத் தொகை ரூ.145 கோடியை வழங்கவும் ஒப்புதல்

போக்குவரத்து ஊழியர் சங்கங்களு டன் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில், 240 நாட்கள் பணியாற்றினால் பணிநிரந்தரம், நிலுவையில் உள்ள ரூ.145 கோடியை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொண் டுள்ளதாக அரசு தரப்பு குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் 1.43 லட்சம் பேருக்கு 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக அரசு தரப்பில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர், தொழிற்சங்க பிரதிநிதி களுடன் கடந்த 2-ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம் பேட்டையில் உள்ள மாநகர போக்கு வரத்துக் கழக பணிமனையில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி, மதியம் 2 மணி வரை நடந்தது.

இதில், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர ராவ், நிதித்துறை கூடு தல் செயலாளர் உமாநாத், போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் கள் உட்பட குழு உறுப்பினர்கள் மற்றும் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சின்னசாமி எம்எல்ஏ, தொமுச பொதுச்செயலாளர் சண் முகம், பொருளாளர் நடராஜன், சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், தேமுதிக தொழிற் சங்கத் தலைவர் சவுந்திரபாண்டியன் உட்பட 42 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பணி நிரந்தரம், நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதால் பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மார்ச் 20-ம் தேதி நடத்தப்படும் என அரசு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சிஐடியு தலை வர் சவுந்தரராஜன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் லட்சுமணன் ஆகியோர் கூறியதாவது:

போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர் பாக நடத்தப்பட்ட 2-ம் கட்ட பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்தது. முதல்கட்ட பேச்சுவார்த்தையில் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து முதலில் விவாதித்தோம். கடந்த 2013 பிப்ரவரி 20, 21-ம் தேதிகளில் நடந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட போக்குவரத்து ஊழியர் களின் ஆப்சென்ட் ரத்து செய்யப் பட்டு விடுப்பு காலமாக ஏற்றுக் கொள் ளப்பட்டது. தினக்கூலி ஊழியர் களுக்கு ஒப்பந்தத்தின்படி சம்ப ளம் வழங்குதல், 240 நாட்கள் பணி யாற்றினால் பணிநிரந்தரம் செய் வது, நிலுவையில் உள்ள அக விலைப்படி, பஞ்சப்படி ரூ.145 கோடியை வழங்குவது, விபத்து நேரத்தில் உரிமம் சஸ்பெண்ட் செய் யப்பட்டால், இடைப்பட்ட காலத்தில் மாற்றுப்பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு குழுவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், சேமநல நிதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல், ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம், கருணை அடிப்படையிலான உத வித் தொகை உயர்வு, தையல் கூலி, இரவு தங்கும் படி உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், புதிய ஊதிய உயர்வு தொடர்பாகவும் 20-ம் தேதி நடக்கவுள்ள 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் விரிவாக பேசப்படும் என அரசு குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பேச்சுவார்த்தை நடந்த குரோம் பேட்டை பணிமனை வளாகத்துக்கு வெளியே போக்குவரத்து ஊழியர் கள் ஏராளாமானோர் குவிந்திருந் தனர். கடந்த முறை நடந்த பேச்சு வார்த்தையின்போது இரு தரப் பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த முறை அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினக்கூலி ரூ.540 கிடைக்குமா?

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்தத்தின்படி தினக்கூலி வழங் கப்படுவதில்லை. நாள் ஒன் றுக்கு ரூ.230 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கப்படும் என குழுவினர் உறுதியளித்துள்ளனர். இதை நடைமுறைப்படுத்தினால் ஓட்டுநருக்கு ரூ.540, நடத்துநருக்கு ரூ.530 வரை தினக்கூலி கிடைக்கும்.

20,000 பேருக்கு பணி நிரந்தரம்

அரசு போக்குவரத்துத் துறையில் 240 நாட்கள் பணியாற்றினாலே பணி நிரந்தரம் செய்யலாம் என்ற கோரிக்கை ஏற்கெனவே ஏற்கப்பட்டது. ஆனால், அதை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்து வருவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டினர். குறிப்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தை தவிர, மற்ற போக்குவரத்துக் கழகங்களில் அதிகமானோர் பணி நிரந்தரத்துக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், 240 நாட்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை அரசு தரப்பில் அமைத்த குழுவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால், 20 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

12-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தமிழக போக்குவரத்துக் கழக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு தரப்பு குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை பணிமனையில் நேற்று நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x