Published : 26 Mar 2015 10:11 AM
Last Updated : 26 Mar 2015 10:11 AM
உள்ளாட்சி அமைப்புகளில் 6 ஆயிரம் கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பட்ஜெட்டில் கூறியிருப்ப தாவது: கடந்த நான்கு ஆண்டுகளில் கிராம ஊராட்சி சாலைகளையும் ஊராட்சி ஒன்றிய சாலைகளையும் மேம்படுத்த ரூ.6ஆயிரத்து 982 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2015-16-ம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 6ஆயிரம் கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.1, 400 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் எரிசக்தி வசதியோடு கூடிய 60 ஆயிரம் வீடுகள் ஆண்டுதோறும் அமைக்கப்படுகின்றன. இது வரை ரூ.4 ஆயிரத்து 680 கோடி மதிப்பீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 60ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.1,260 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திரா வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 53ஆயிரத்து 429 வீடுகளுக்கு மாநில அரசு ரூ.364 கோடியே 38 லட்சம் அளித்துள்ளது. 2015-16-ம் ஆண்டில் ரூ.656 கோடியே 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT