Published : 14 Mar 2015 12:56 PM
Last Updated : 14 Mar 2015 12:56 PM

நீதிபதிகள் நியமனம்: ஆளுநரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தலைமையிலான வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையில் சனிக்கிழமை ஆளுநர் ரோசய்யாவை வழக்கறிஞர் சங்கத்தினர் சந்தித்தனர். வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால்கனகராஜ் ஆளுநரிடம் ஒரு மனுவை அளித்தார்.

''18 நீதிபதிகள் காலிப் பணியிடங்களையும் ஒரே நேரத்தில் நிரப்ப வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு, சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும். தற்போது பரிந்துரைத்துள்ள 9 பேர் கொண்ட பட்டியலை நிராகரிக்க வேண்டும்.'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

18 பணியிடங்களில் மகளிருக்கு 6 இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பெண் வழக்கறிஞர் சங்கம் மனு அளித்துள்ளது. கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆளுநர் உறுதி தந்திருக்கிறார் என வழக்கறிஞர் சங்கத் தலைவி நளினி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x