

சோமமங்கலம் அருகே நகைக்காக பெண்ணைக் கொலை செய்த 3 பேருக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
சோமமங்கலம் அடுத்த மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்கன் (51). இவரது மனைவி சாந்தி (35). இருவரும் அதே ஊரில் வாசுதேவன் என்பவரின் விவசாய நிலத்தை பராமரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2009 அக்டோபர் 3-ம் தேதி, சாந்தி வீட்டில் தனியாக இருந்த போது கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 7 சவரன் நகைகள் பறிக்கப்பட்டன.
இது தொடர்பாக சோம மங்கலம் காவல் நிலைய போலீஸார், அதே ஊரைச் சேர்ந்த முத்து (43), ராஜி (28), செல்வம் (45) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை யில் நகைக்காக இந்தக் கொலையை செய்தாக வாக்குமூலம் அளித்திருந்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-2-ல் நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளிகள் 3 பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஆர்.செல்வகுமார் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித் தார். மேலும் தலா ரூ.5ஆயிரம் அபராதமும், அதை கட்டத் தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் கே.சம்பத் ஆஜரானார்.