Published : 22 Mar 2015 11:20 AM
Last Updated : 22 Mar 2015 11:20 AM

37-வது விபத்து: விமான நிலையத்தில் கண்ணாடி கதவு விழுந்தது

சென்னை விமான நிலையத்தில் நேற்று தானியங்கி கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. மத்திய அமைச்சர் வரும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது விமான நிலையத்தில் ஏற்படும் 37-வது விபத்தாகும்

விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத் தின் 3-வது கேட் வழியாக நேற்று காலை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு வருவதாக இருந்தது. இதையடுத்து மத்திய தொழிற்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது 3-வது கேட்டில் இருந்த தானியங்கி கண்ணாடி கதவு திடீரென உடைந்து கீழே விழுந்தது. விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தினர். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை, முனையத்தின் 2-வது கேட் வழியாக வெளியே அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x