Published : 22 Mar 2015 11:20 AM
Last Updated : 22 Mar 2015 11:20 AM
சென்னை விமான நிலையத்தில் நேற்று தானியங்கி கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. மத்திய அமைச்சர் வரும் நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது விமான நிலையத்தில் ஏற்படும் 37-வது விபத்தாகும்
விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத் தின் 3-வது கேட் வழியாக நேற்று காலை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு வருவதாக இருந்தது. இதையடுத்து மத்திய தொழிற்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3-வது கேட்டில் இருந்த தானியங்கி கண்ணாடி கதவு திடீரென உடைந்து கீழே விழுந்தது. விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தினர். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை, முனையத்தின் 2-வது கேட் வழியாக வெளியே அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT