Published : 30 Mar 2015 10:00 AM
Last Updated : 30 Mar 2015 10:00 AM

சென்னையில் இன்ஜினீயர் வீட்டில் 20 பவுன் திருட்டு

குன்றத்தூரில் இன்ஜினீயர் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு போனது.

சென்னை குன்றத்தூர் ஜெசி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (35). ராமாபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொருள் இன்ஜினீயராக பணிபுரிகிறார். இவர் கடந்த 27-ம் தேதி தனது குடும்பத்துடன் திருக்கடையூர் கோயிலுக்கு சென்றார். நேற்று காலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக அவர் குன்றத்தூர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x