Published : 14 Mar 2015 10:01 AM
Last Updated : 14 Mar 2015 10:01 AM

பெண்ணை கிண்டல் செய்தவர் அடித்துக் கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இளம்பெண்ணை கிண்டல் செய்தவரை அப்பகுதி மக்கள் அடித்துக் கொன்றனர்.

ஆக்ராவின் ஷாகன்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஜீத்து (22). இவர் கடந்த புதன்கிழமை மது அருந்திவிட்டு தனது காலனி பகுதியில் அமர்ந்து இருந்தார். அப்போது மோலி பாடாவாசியைச் சேர்ந்த இளம்பெண் அந்த வழியாகச் சென்றார். அவரிடம் ஜீத்து தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த பெண் தனது சகோதரர்களிடம் கூறியுள்ளார். அவரது சகோதரர்கள், அப் பகுதி மக்கள் என சுமார் 50 பேர், ஜீத்துவை வீட்டில் இருந்து வெளியில் இழுத்து வந்து தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர், ஆக்ரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜீத்து உயிரிழந்தார்.

கடந்த மார்ச் 5 ஆம் தேதி நாகாலாந்தின் திமாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலியல் பலாத்கார விசாரணைக் கைதியை பொதுமக்கள் வெளியே இழுத்து வந்து அடித்துக் கொன்றது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x