Published : 06 Mar 2015 09:54 AM
Last Updated : 06 Mar 2015 09:54 AM

விபத்து நிவாரண நிதி ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு: தமிழக அரசு உத்தரவு

விபத்தில் மரணம் அடைவோரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து விபத்து நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிதியுதவி பெறுவதற்கான குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.24 ஆயிரமாக இருந்து வந்தது. இந்த நிலையில், விபத்து நிவாரண நிதியை ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமான உச்சவரம்பு உயர்வு

அதேபோல், வருமான உச்சவரம்பை ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.48 ஆயிரமாக அதிகரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் வருவாய்த்துறையின் செயலர் ஆர்.வெங்கடேசன் பிறப் பித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x