Published : 27 Mar 2015 11:02 AM
Last Updated : 27 Mar 2015 11:02 AM

விளையாட்டும் கண்ணீரும்

உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது துரதிர்ஷ்டவசமானது.

‘கேடும் பெருக்கமும் இல்லல்ல’ எனும் வள்ளுவரின் வார்த்தைகளுக்கேற்ப, வாழ்வின் சத்தியத்தை சாதாரண மனிதர்களும் பயிற்சி செய்வதற்காக உருவானவைதான் எல்லா வகையான விளையாட்டுகளும்.

விதிமுறைகளைப் பின்பற்றுதல், பொது நோக்கத்தை நிறைவேற்றக் குழுவாக இணைந்து செயல்படுதல், வெற்றி-தோல்வியை மனதின் சமநிலை பிறழாமல் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகளை வளர்ப்பதே விளையாட்டுகளின் நோக்கம் ஆகும்.

ஆனால், இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தோல்வியைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு அழுவது விளையாட்டுக்கு அழகல்ல!

- அ.குருநாதன், மதுரை-14.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x