Published : 30 Mar 2015 09:58 AM
Last Updated : 30 Mar 2015 09:58 AM
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாத இறுதியில் அனைத்து மாவட்டங்களிலும் வெயில் அதிகரித்து வந்தாலும், காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாகவே திருநெல் வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று பதிவான மழை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களைவிட தமிழகத்தில் நேற்று வெயில் சற்று தணிந்திருந்தது. திருப்பத்தூரில் பதிவான 102.2 டிகிரி தான் அதிகபட்ச வெயிலாகும். சேலத்தில் 100.4 டிகிரி, மதுரையில் 99.68 டிகிரி, திருச்சியில் 99.5 டிகிரி, வேலூரில் 98.6 டிகிரி, சென்னையில் 93.92 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT