Published : 16 Mar 2015 10:12 AM
Last Updated : 16 Mar 2015 10:12 AM

சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைது

அரும்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் கடந்த 7 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நந்தனம் சிக்னல், காமராஜர் சாலை, சென்னை கலெக்டர் அலுவலகம், ஆற்காடு சாலை ஆகிய இடங்களில் அவர்கள் ஏற்கெனவே மறியல் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலையில் அரும்பாக்கம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகளை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x