Published : 07 Mar 2015 09:44 AM
Last Updated : 07 Mar 2015 09:44 AM

ஏப். 25-ல் மதுரையில் விடுதலை சிறுத்தைகள் முப்பெரும் விழா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெள்ளி விழா உட்பட முப்பெரும் விழா, மதுரையில் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெற உள்ளதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று தெரிவித்தார்.

வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக நேற்று விழுப்புரம் வந்த திருமாவளவன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்குகிறது. கட்சியின் முதல் கொடி மதுரையில் ஏற்றப்பட்டது.

எனவே, வரும் ஏப்ரல் 25-ம் தேதி வெள்ளி விழா, விருது வழங்கும் விழா, அம்பேத்கர் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மதுரையில் கொண்டாடப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. தமிழகத்தில் கவுரவக் கொலைகள் நடைபெறவில்லை என்று தமிழக முதல்வர் கூறுகிறார். இது வியப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x