Published : 12 Apr 2014 12:06 PM
Last Updated : 12 Apr 2014 12:06 PM
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இங்கு வரும் 14-ம் தேதி, தமிழ்ப் புத்தாண்டு (ஜய வருடம்) பிறப்பை முன்னிட்டு, 1008 பால்குடம் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
இதையொட்டி, அன்றைய தினம் காலை 8 மணிக்கு, திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயில் வளாகத்தில் இருந்து 1008 பால் குடங்களை, பக்தர்கள் தலையில் சுமந்தவாறு மலைக்கோயிலை சென்றடைவர். பின், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஜெய்சங்கர், ஆணையர் புகழேந்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT