ராஜீவ் கொலையாளிகள் வழக்கில் இன்று தீர்ப்பு

ராஜீவ் கொலையாளிகள் வழக்கில் இன்று தீர்ப்பு
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கடந்த பிப்ரவரி 18-ம் தேதி ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த மூவர் உட்பட வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்து தமிழக சட்டசபையில், 20-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில், தலைமை நீதிபதி பி.சதாசிவம் பதவிக்காலம் சனிக்கிழமையுடன் முடிவதால், இந்த வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in