Published : 28 Mar 2015 04:49 PM
Last Updated : 28 Mar 2015 04:49 PM

முழு அடைப்பு போராட்டம் வெற்றி: ஸ்டாலின்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நடந்த முழு அடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஜோத்பூர் - மன்னார்குடி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய 1000 பேரையும் போலீஸ் கைது செய்தது.

கைதானவர்கள் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு திடலில் வைக்கப்பட்டனர். அவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.

பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். ''அனைத்துகட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது உறுதி. உணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் கருத்தை ஏற்றுக் கொண்டு சட்டமன்றத்தை ஒத்திவைத்ததற்கு சபாநாயகருக்கு நன்றி'' என ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x