Published : 20 Feb 2015 10:12 AM
Last Updated : 20 Feb 2015 10:12 AM

மனிதநேய அறக்கட்டளையில் படித்த 8 பேர் ஐஎப்எஸ் தேர்வில் தேர்ச்சி

சென்னை மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை மையத்தில் படித்த 8 பேர் ஐஎப்எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை சிஐடி நகரில் உள்ள மனிதநேய அறக்கட்டளை மூலம் 'மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம்' நடத்தப்படுகிறது. மத்திய மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வுகளுக்கு இங்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

2014-2015ம் ஆண்டுக்கான இந்திய வன அலுவலர்(ஐஎப்எஸ்) பணிக்கு மத்திய தேர்வாணையம் நடத்திய நேர்முக தேர்வில், மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் படித்த 7 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி, மையத்தின் இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x