Published : 16 Feb 2015 10:09 AM
Last Updated : 16 Feb 2015 10:09 AM

தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி தமிழாசிரியர்கள் மார்ச் 8-ல் ஆர்ப்பாட்டம்

தமிழை முதன்மைப் பாடமாக அறிவிக்கக் கோரி வரும் மார்ச் 8-ல் பேரணி நடத்தப்படும் என தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொதுச் செயலர் இளங்கோ தெரிவித்தார்.

அவர் திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்துக்கு இணையாக சிறப்பு ஆசிரியருக்கு ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ல் பேரணி நடத்தப்படும். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் இந்த பேரணியில், பல்வேறு ஆசிரியர் சங்க கூட்டமைப்புகள் பங்கேற்கின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x