Published : 19 Feb 2015 10:01 AM
Last Updated : 19 Feb 2015 10:01 AM

சிங்காரவேலரின் 156-வது பிறந்தநாள் விழா: அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை

ம.சிங்காரவேலரின் 156-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் ம.சிங்காரவேலரின் 156-வது பிறந்தநாள் விழா சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற் றது. இதில் சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கால்நடை பராமரிப் புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின் னையா, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் மூ.இராசாராம், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவள்ளி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிங்காரவேலர் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தா.பாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, முன்னாள் எம்பி, எம்.அப்பாதுரை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராஜன் எம்எல்ஏ, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங் கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் சிங்கார வேலரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x