Published : 24 Feb 2015 09:50 AM
Last Updated : 24 Feb 2015 09:50 AM
கராத்தே வீரர் ஹுசைனிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், தன்னைத்தானே வருத்திக் கொள்ளும், உயிருக்கு உலை வைக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்பதற்காக கராத்தே வீரர் ஹுசைனி தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டு 7 நிமிடங்கள் இருந்தார்.
இந்நிலையில் ஹுசைனிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், "அன்புக்குரிய ஹுசைனி, தடைகளைத் தகர்த்து தமிழக முதல்வராக நான் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக சிலுவையில் அறைந்து கொள்ளும் வலி மிகுந்த காரியத்தைச் செய்துள்ளீர்கள். உங்கள் உற்சாகத்தைப் பாராட்டுகிறேன். அதே வேளையில் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், என் நலன் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி. உங்கள் நலன் மீதும் அக்கறை செலுத்துமாறு அறிவுறுத்துகிறேன். இதுபோன்ற உயிருக்கு உலை வைக்கும் காரியங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT