Last Updated : 11 Feb, 2015 04:25 PM

 

Published : 11 Feb 2015 04:25 PM
Last Updated : 11 Feb 2015 04:25 PM

ஏமனில் பிரிட்டன் தூதரகம் மூடல்

ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் பெரும்பகுதியை ஆக்கிரமத்துள்ளதால் அங்கிருந்த தங்களது தூதரக அதிகாரிகள் அனைவரையும் துரும்ப பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரிட்டன் நாட்டு அமைச்சர் டோபிஸ் எல்வுட் கூறும்போது, "ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பிரிட்டன் தூதரகம் மூடப்பட்டது. தூதரக அதிகாரிகள் அனைவரையில் உடனடியாக வெளியேர நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்" என்றார்.

ஏமனில் கடந்த சில மாதங்களாக அரசியல் அசாதாரன நிலை உருவாகியுள்ளது. தலைநகர் சனா உள்ளிட்ட பெரும்பகுதிகளை ஷியா ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். நாட்டின் அதிபர் மன்சூர் ஹதி பதவி விலகியதால் ராணுவமும் செயல்படாமல் உள்ளது.

முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. இருப்பினும் தூதரகத்தை மூடுவதினால் ஏமனில் நடத்தப்பட்டு வரும் அல்-காய்தாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x