Last Updated : 07 Feb, 2015 12:04 PM

 

Published : 07 Feb 2015 12:04 PM
Last Updated : 07 Feb 2015 12:04 PM

பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ தாக்குதல் நடத்தும்: முன்னாள் அமெரிக்க தூதர் எச்சரிக்கை

இந்தியாவில் அடுத்து ஏதேனும் தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அது பாகிஸ்தானிடமிருந்து உதித்தது என்பது தெரிய வந்தால், நிச்சயமாக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவத்தைப் பயன்படுத்தி மிகத் தீவிரமான பதிலடியைத் தருவார் என்று நம்பிக்கை உள்ளது, என இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள வெளியுறவு கவுன்சில் எனும் அமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறியதாவது:

15 ஆண்டுகளுக்கு முன்னாள் டெல்லியில் நடந்த நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பின்னர் ஒவ்வொரு இந்தியப் பிரதமரும் இதுபோன்ற தீவிரவாதத் தாக்குதல் நடக்கும் சமயங்களில் ராணுவத்தைப் பயன்படுத்துவதில் இருந்து பின்வாங்கினார்கள்.

ஆனால் இன்று அந்த நிலைமை மாறியுள்ளது. தற்போதைய இந்தியப் பிரதமர் பின்வாங்கமாட்டார் என்று நம்புகிறேன். இனி வரும் காலங்களில் இந்தியாவில் ஏதேனும் தீவிரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அது பாகிஸ்தான் ஏவியது என்று தெரிய வந்தால், பிரதமர் மோடி, நிச்சயமாக ராணுவத்தைப் பயன்படுத்துவார். அதனால் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்துவதன் மூலம் தகுந்த பதிலடி அளிப்பார்.

தங்களது கடந்தகால நடத்தைகளை தற்போதைய இந்தியப் பிரதமரால் சகித்துக்கொள்ள முடியாது என்பதை பாகிஸ்தானியர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x