Published : 25 Feb 2015 09:32 AM
Last Updated : 25 Feb 2015 09:32 AM

வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்

வனத்துறை பணியிடங்களில் வனவியல் பட்டதாரிகளுக்கு இடஒதுக்கீடு கோரி மேட்டுப் பாளையம் வனக் கல்லூரி மாணவ - மாணவிகள் மேற்கொண்டு வந்த 28 நாட்கள் தொடர் போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு முடிவுக்கு வந்தது.

தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகத்தின் கீழ், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் வனத்துறையில் உள்ள வனச்சரகர் காலிப் பணியிடங்களை வனவியல் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

வனவர் பணியிடங் களுக்கு வனவியல் படித்த பட்டதாரிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 27-ம் தேதி முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி யும் பலனில்லை. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 நாட்கள் தொடர் உண்ணா விரதம் காரணமாக 64 மாணவ, மாணவிகள் உடல் நலம் பாதிக் கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு, தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் 213 மாணவர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் போராட்டத்தை கைவிடு வதாக கல்லூரி முதல்வர் பரமாத்மாவிடம் கடிதம் கொடுத் தனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக வனக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x