Published : 14 Feb 2015 10:13 AM
Last Updated : 14 Feb 2015 10:13 AM

காஞ்சி நகர சாலைகளை மேம்படுத்த உலகவங்கி குழுவுடன் ஆலோசனை: வண்டலூரில் மேம்பாலம் அமைக்க பரிந்துரை

காஞ்சி நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உலக வங்கி கடனுதவியுடன் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

காஞ்சிபுரம் நகரத்தை ஏற்கெனவே மத்திய அரசு பாரம்பரியமிக்க நகரமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், நகரத்தில் சுற்றுலாவாசிகளின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது. இந்நிலையில், நகரத்தில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளை உலக வங்கி கடனுதவியுடன் மேம் படுத்தி, முக்கிய சாலை மற்றும் சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகம் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், உலக வங்கி குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் சாலை பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: காஞ்சி நகரப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது மற்றும் சாலைகளை மேம்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உலக வங்கி கடனுதவியுடன் ரூ. 24 கோடி மதிப்பில் சாலைகளை மேம்படுத்த முதற்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடந்த 2014ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கெனவே உலக வங்கிகுழுவினருடன் ஆலோ சனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மீண்டும் உலகவங்கி குழுவின ருடன் ஆலோசனை நடத்தப் பட்டது. இதில், நகரப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சாலை மேம்பாடு பணிகள் தொடர் பாக திட்ட மதிப்பீடு தயார் செய்து தரும்படி, உலக வங்கி குழுவினர் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து அனைத்து துறை களுடன் ஆலோசித்து வரும் ஏப்ரல் மாதம் திட்டமதிப்பீடுகளை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி.விஜயகுமார் கூறியதாவது: காஞ்சிபுரம் நகரில், சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. மேலும், போக்கு வரத்து நெரிசலை குறைப் பதற்காக புதிய ரயில் நிலையப் பகுதியில், மேம்பாலமும் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கிழக்கு ராஜவீதி பகுதியில் சுரங்கபாதையும் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், சாலைகளில் ஆக்கிர மிப்புகள் அதிகமாக உள்ளதால், அதை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், வண்டலூர் உயிரியல் பூங்கா பகுதியில் நான்கு சாலைகள் இணையும் பகுதி யில் உள்ள தேசிய நெடுஞ் சாலையில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை குறைப் பதற்காக, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண் டும் என, மாவட்ட போலீஸ் நிர்வாகம் தரப்பில், அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x