Published : 22 Feb 2015 12:21 PM
Last Updated : 22 Feb 2015 12:21 PM
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வரும் மார்ச் 5-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார். வரும் மார்ச் 5-ம் தேதி அவர் மீண்டும் தமிழகம் வரவுள்ளார். அப்போது உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு மேற்கொள்வார். கோவையில் மார்ச் மாதம் நடக்கவுள்ள மாநில செயற்குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்க வேண்டும் என்று மாநில தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT