Published : 23 Feb 2015 10:34 AM
Last Updated : 23 Feb 2015 10:34 AM

சென்னையில் நாளை முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம்: அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் முடிவு திருச்சி

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் நாளை (பிப். 24) முதல் 3 நாட்களுக்கு தொடர் மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த சங்கத்தின் உயர்நிலைக் குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். புதிய பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு, பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2006 ஜன. 1 முதல் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை வெளிப்படைத் தன்மையுடன் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தித் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்தக் கோரிக்கை களை வலியுறுத்தி சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் நாளை (பிப். 24) முதல் 3 நாட்களுக்கு தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபடு வோரைக் கைது செய்தால் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒட்டு மொத்த வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x